மாநில ஆட்சிகளீன் மும்மூர்த்திகளுக்கு ,
‘ கவுரவ டாக்டர் ‘ பட்டம் வழங்கியிருப்பது , சரியான காமெடிங்க ..!
டாக்டர் பட்டங்கள் மதிப்பிழந்ததற்கு ,இத்தகு கூஜா தூக்கலே காரணம் .
பட்டங்கள் , எத்துறையிலேனும் சாதித்தவர்க்கு தரப்படும் .
கலைஞருக்காகவது , தமிழிற்காய் தந்தோம் என சாக்கிடலாம் ..!
சோனியா காந்தியும் , மன்மோகன் சிங்கும் சாதித்தது என்ன …?
பன்னிரண்டு சதவீத பணவீக்கத்தை எழுப்பியமைக்கென்றால் , சரியெனலாம் ..!
பல்கலைக் கழகத்தின் கண்ணுக்கு , அதிகாரமும் , பதவியுமே தென்பட்டிருக்கிறது ..!
உண்மையில் , மன்மோகன் சிங்கிற்கு தரவே ,இவர்கட்கு தோணியிருக்காது .
ஆனால் , பிரதமருக்கே இல்லையென்று விட்டு , எப்பதவியுமில்லா சோனியாவிற்கு தந்தால் , கணக்கில் உதைக்குமே என , மன்மோகனை சேர்த்து விட்டனர் போலும் ..!
பாவம் , ‘ எகனாமிக்ஸ் கிங் ‘ …மன்மோகன் சிங் ..! பிரதமராக ஆசைப்பட்டால் , இதுவும் வேண்டும் , இன்னமும் வேண்டும்தான் ..!
பட்டங்கள் , வளரும் மாணவர்கென்றால் , மிக நல்லதெனலாம் .
அறுபதை தாண்டும் சோனியாவும் , எழுபதிலிருக்கும் மன்மோகனும் , எண்பத்தைந்திலிருக்கும் முதல்வரும் , கவுரவ டாக்டர் பட்டங்கள் பெற்றுச் சாதிப்பது என்ன …?
அதிகாரமிருந்தால் , அரசியல்வாதியாயிருந்தால் , எந்த வயதிலும் பட்டங்கள் பெறலாமென்பதே , இதனால் தெளிவாகிறது .
முதல்வரின் பேச்சோ , அதை விட அபத்தமாயுள்ளது .
தள்ளாத வயதிலும் , தமிழெழுதுவதற்காய் , முதல்வருக்குத் தரலாம் . பாராட்டலாம் .
ஆனால் , முதல்வரோ …
பட்டம் பெற்றதும் , கிரிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு சந்தேகங்கள் தீர்க்கப்படுமென்கிறார் .
அருந்ததியர்க்கு , தனி ஒதுக்கீடு வழங்கபடுமென்கிறார்.
இதுவா , இளைஞர்க்கு சொல்லும் ஊக்க வார்த்தைகள் ..?
படிப்பில் … விடா முயற்சி , கடும் உழைப்பைக் காட்டுங்கள் எனச் சொல்லாமல் ,
கிரிஸ்தவர்க்கான இட ஒதுக்கீடைத் தருவோம் ; இடம் ஒதுக்குவோம் என்கிறார் .
அதுவும் , கிரிஸ்தவரான , சோனியாவை வைத்துக் கொண்டு சொல்கிறார் ..!
போததற்கு , பட்டத்தை வாங்கிக் கொண்டு , பட்டம் தந்த பல்கலைகழகத்திற்கு , இத்தனை கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கிறார் .
ஆக , பட்டமளித்தவர்க்கு பிச்சை அளிக்கிறார் என்றுதானேங்க அர்த்தம் ..!
டாக்டர்கள் அளிப்பது உயிர்ப் பிச்சை ; பல்கலைக்கழகங்கள் எடுப்பதோ , பணப் பிச்சைங்க..!