பிரசன்னா பார்வை .ராமரும் , சேதுவும் …!

                                          வணக்கம் . தமிழக முதல்வரது , கொள்கைப் பிடிப்பான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கின்றது .
                                       ராமரும் , ராமாயணமும் . . .புராணக் கட்டுக்கதைகள் என்ற  வாதமுள்ள . . . மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுவிட்டது .
கேவலம் , ஆட்சிக்காக . . .? கலைஞர் , அதை எப்படிப் பார்த்துக் கொண்டிருப்பது ..? அவரது , சுயமரியாதைக் கொள்கை  என்னாவது  . . ?
ஆரியரை எதிர்த்து , மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியிருக்கலாமே . . ?  அல்லது , கேவலம் , மத்திய அமைச்சர்களையாவது , பதவி விலகச் சொல்லியிருக்கலாமே . . .?
கலைஞர் , அதை ஏன் செய்யவில்லை …என்பதுதான் ,  நாளைய புராணமாக இருக்கக் கூடும் . .!

கட்சி நடத்த ,யாரோ ஒருவர் வந்து பேரம் பேசினார் எனறும் , பா . ஜ . க .  கட்சி நடத்த …
 தி . மு . க ., பா . ம   . க ., எல்லாம் இளிச்சவாயர்களா . . .என்றும் கேட்கிறார் . 
கலைஞருக்கு … ‘ செலக்டிவ் அம்னிஷியா ‘ ..போலும் ..!

அதே பா . ஜ . க ., வுடன் கூட்டாயிருந்துதானே , இதே கலைஞரும் , பா . ம . க . ,வும் . . ஐந்தாண்டுக்கும் மேலாக மத்தியில் பங்கு பெற்றார்கள்் . மாறனின் மரணப்படுக்கையிலும் , அவரது மந்திரி பதவியை கலைஞர் தக்க வைத்துக் கொண்டார் .
அப்போது , இந்த திராவிடச் சூரியருக்கு , அவர்கள் ஆரியர்கள் எனத் தெரியவில்லையாமா . . ?

இளிச்சவாயர்கள் ,பதவியை கோட்டை விடுவதில் மட்டும் இளிச்சவாயர்களீல்லை போலிருக்கிறது . .!
கொள்கை வேறு ; ஆதரவு வேறு . . .என்பதுதான் பகுத்தறிவு போலும்  . .! போகட்டும் .,

இதே பா . ஜ . கவும்  , அ .தி . மு . க .,தான் ., சேது சமுத்திரத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள் என்கிறார் . .? சரி . அவர்கள் , இத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார்களே தவிர , ராமர் பாலத்தை இடித்துத்தான் நிறைவேற்றுவோம் எனச் சொல்லவில்லையே . .!
இப்போதும் , ராமர் பாலத்தை இடிக்காமல் , மாற்றுப் பாதையமைத்து நிறைவேற்றுங்கள் என்றுதானே கேட்கிறார்கள் ..?
தவிரவும் ,பார்லிமெண்ட்டில் ‘45 ‘ மணி நேரத்திற்கும் மேலாய் சேதுவிற்காய் பேசினவர்களையும் காணவில்லை என ‘வை . கோ ., ‘வைச் சாடுகிறார் .
45 வருடத்திற்கும் மேலாக , சுயமரியாதைக்காக ,சுடரெனப் பணியாற்றும் கலைஞர் ,
ஆட்சிக்காக …ஆரியருக்கு அடிபணியும் காங்கிரஸுக்கு  ஆதரவை விலக்காமல் இருப்பது எந்தச் சுயமரியாதையோடு என்றாவது சொல்லட்டும் . .!
அதே போல் ,
ராமர் மட்டுமன்றி , ‘ இயேசு கிறிஸ்து ‘ , ‘அல்லா ‘ .,க்களும்  கூட  , மூட நம்பிக்கைதான் எனச் சொல்லி சுயமரியாதைக் கொள்கையை நிலை நாட்டட்டும் ..!

ராமரை  நம்பாத கலைஞர் , ‘ ராமதாஸ் ‘ …என்ற பெயருள்ளவரை நம்பி  , ஆட்சி நடத்துவதுதான் ,..
திராவிட ராமாயணம் போலும் . . .!
      பிரசன்னா 

Say your words