பிரசன்னாவின் அரசியல் பார்வை

பா .ம.க. தலைவர் ராமதாசின் , தனியார்மயமாக்கலை எதிர்த்த , நிலமீட்பு போராட்டங்கள், சிரிக்கத்தான் வைக்கின்றன .  உத்தேசித்துள்ள தனியார் தொழிற்சாலைகள் , வன்னியரினம் பெரும்பான்மையாக இருக்கின்ற பகுதிகளீல் வருகின்றன .
அவர்கள் புலம் பெயர்ந்தால் , இருக்கும் ஆதரவையும் ,பா.ம.க .,  இழந்து விடும் எனபதே ,ராமதாசின் ‘ விவசாயி ‘ ஆதரவுப் போராட்டத்தின் அடிப்படைக் காரணம் .!

எப்போதும் , வளர்ச்சித் திட்டங்களின் போது , மக்களின் எல்லாச் சாராரையும் திருப்திபடுத்த முடியாது .
திருப்திபடுத்த முனைந்தால் , வளரவே முடியாது என்பதை உணராமல் ,எல்லாப் பிரச்னையையும் ,ராமதாஸ் அரசியலாக்குகிறார் .

எந்த பகுதியில் , வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் , எல்லாரும் இவரை அழைத்தாற் போல் ஒடோடிச் செல்கிறார் .
மக்களின் கருத்துக்களைக் கேட்கிறார் . நிலம் கொடுக்காதீர்கள் என்ற , தன் கருத்தைத் திணிக்கிறார் .

இவருக்கு கிடைப்பது , விளம்பரப் பெருமை .  ‘ நில மீட்புக் காவலர் ‘ என விரைவில் பட்டமும் சூட்டிக் கொண்டு விடுவார் ..!
விவசாயிகளுக்கோ , விற்க மனமிருந்தும் , நல்ல விலைக்கு விற்க முடியாத கொடுமைதான் ஏற்படுகிறது .

காய்கறிகளின் , விலையை ஏற்றினால்தான் , விவசாயிக்கு லாபம் .
காய்கறி , குறைந்த விலைக்கு விற்றால்தான் , பொது மக்களுக்கு லாபம் .
இது சமுகத்தின் நியதி .

ராமதாஸ் , விவசாயியை , நிலத்தை விற்காதே என ஊக்கப்படுத்துவார் .
அரசாங்கத்தை , காய்கறி விலையை கட்டுப்படுத்தாமல் , ஏழை மக்களின் வயிற்றீல் அடிக்காதீர்கள் என லாவணி பாடுவார் .

இரட்டை வேடங்களினால் , இரட்டை வித லாபம் அடைய பார்க்கிறார்கள் , இன்றைய அரசியல்வாதிகள் என்பதற்கு , இராமதாஸ் ஒரு நல்ல உதாரணம் .

ச . பிரசன்னா ,

Say your words