பிரசன்னாவின் தமிழ்ப் பதிவுகள்

அன்பு .

முதலிருபது வருடம் 
கணவனுக்காகவும் ,
பிந்தைய வருடங்கள் 
பிள்ளைக்காகவும் ,
மிஞ்சிய வருடங்களை 
பேரன்களுக்காகவும்
கழித்ததும்தான்
கண்ணம்மா பாட்டிக்குத்
தெரிந்தது  .
அவளது
அம்மாவின் அன்பும்
‘ பேங்க் ‘  பேலன்ஸும்தான்
உலகில்
நிரந்தரமென்று !
      சொந்தம் .

அம்மாவோடு
 நானும்
சேர்ந்து
கொணடேன்
முதியோர் இல்லத்தில் .
நானும்
வேண்டாத
அம்மாவாய்
மாறிய பொழுது !
   ச. பிரசன்னா 

Say your words