அன்பு .
முதலிருபது வருடம்
கணவனுக்காகவும் ,
பிந்தைய வருடங்கள்
பிள்ளைக்காகவும் ,
மிஞ்சிய வருடங்களை
பேரன்களுக்காகவும்
கழித்ததும்தான்
கண்ணம்மா பாட்டிக்குத்
தெரிந்தது .
அவளது
அம்மாவின் அன்பும்
‘ பேங்க் ‘ பேலன்ஸும்தான்
உலகில்
நிரந்தரமென்று !
சொந்தம் .
அம்மாவோடு
நானும்
சேர்ந்து
கொணடேன்
முதியோர் இல்லத்தில் .
நானும்
வேண்டாத
அம்மாவாய்
மாறிய பொழுது !
ச. பிரசன்னா