பிரசன்னா – அறிவிப்பு …!

 அறிவிப்பு …!

நமக்கான பயணங்கள்
ஏற்கனவே எழுதப்பட்டிருந்தும் …
நாம்தான்  எழுப்புகிறோமென …
ஏனோ  இறுமாறுகிறோம் ..?

இன்னார்க்கு இன்னாரென்று …
இறைவன் இறுதி செய்தாலும் …
எல்லார்க்கும் எல்லாமுமென …
ஏனோதானோவென அலைபாய்கிறோம் …!

வாழ்வதில்  இனிமையிருந்தும்
வாழ்வில்    இருத்திடாதிருந்து
மனம் போன போக்கிலெல்லாம்
புண்ணாகிப் போகின்றோம் …!

இனியேனும் அறிவோம் …?
எல்லாமும் சமமென்றால்  …
ஒவ்வொன்றும் சரியென்றால் …
எதற்கிந்த வாழ்வென்று …
வெறுத்திடுவோம்  நாமெல்லாம் …!

என்றிறைவன் அறிந்ததனால் …
புரிந்தவனாய் படைத்ததனால் …
வாழ்கையெனும் பாதையிலே …
எப்போதும் நிறைந்திருக்கும்
மேடுகளும் , பள்ளங்களும் …!
                            ச. பிரசன்னா 

Say your words