வாரிசுகள் – from ச. பிரசன்னா

வாரிசுகள் பற்றிய விசித்திரங்கள் , நம் அரசியலுக்கே பொருந்தும் .
நேருவின் வாரிசாய் , இந்திரா காந்தி வந்தது ; ஆண்டதும் ..அனைவருமறிவார் .
இந்திராவிற்குப் பின் , ராஜிவ் காந்தி .
ராஜிவிற்குப் பின் , சோனியா காந்தி என  காங்கிரசே , வாரிசுக் கட்சியானது தெரிந்ததுதான் .
கலெக்டர் அலுவலகத்திற்குப் போனதாலேயே , ‘ இளவரசன் ;.,ஆக , ராகுல் காந்தி அரியணைக்கு தகுதியானவரும் ஆகிவிட்டார் .
ஆமாம் . தந்தையின் பேருக்கு , தனயன்கள் சொந்தம் கொண்டாடலாம் ..
‘ காந்தி ‘ என்ற பேருக்கு , இந்திரா தொட்டு ராகுல் வரை , எப்படிச் சொந்தமாவார் ..?

எம்.ஜி. ஆரின்  ., ஒட்டு வங்கி ,  ‘ ஜெ ‘ விற்குத்தான் என்பதை , ஏழு கட்சிக் கூட்டணியை எதிர்த்தும் , 61 இடங்களில் அ .தி . மு .க .,வென்றதே உணர்த்துகிறது .
நிதர்சனங்கள் சொல்வதென்ன ,….?
இந்திய அரசியலில் , வாரிசில்லா தலைவர்களுக்கே , இன்றளவும் நிரந்தரப் புகழ் நிலைக்கிறது .
வாரிசுகள் பற்றிய , ஒரு விசித்திர ஒற்றுமையையும் சற்று பாருங்களேன் …!
 தமிழக அரசியலாரின் ஆதர்ச தலைவர்கள் எவருக்குமே , நேரிடையான வாரிசுகள் இல்லையென்பதுதான் …!
காமராஜர் , பெரியார் ,  அண்ணா  , எம் . ஜி . ஆர் , ஜீவா , முத்துராமலிங்கத் தேவர் , என எவருக்குமே , நேரிடையான வாரிசுகளில்லை என்றானது , தமிழகத்தின் சாபக்கேடுதான் .
ராஜாஜிக்கோ , பெண் வாரிசுதான் உண்டு ; அவரும் , அரசியல் பக்கமே வந்ததில்லை .

போததற்கு , நினைவிற்கிருக்கும் வரை , இப் பெரும் தலைவர்கள் எவரையுமே , தங்களது வாரிசு என அறிவித்ததுமில்லை . அதுவும் , வாரிசாகப் பேசுவோர்க்கு , வசதியாகி விட்டது .
பொதுவாய் , சாதாரண பெட்டிக் கடைக்காரருக்கும் , வாரிசு வளர்க்கும் ஆசையிருக்கும் .
ஆனால் , இப்்பெரும் தலைவர்களுக்கு , எவ் வாரிசுமில்லாது போனது , வாரிசு உரிமை கொண்டாடுவோர்க்கு , கொண்டாட்டமாகிவிட்டது .
நாந்தான் வாரிசு , குருகுலக் கொழுந்தென , ஆளாளுக்கு ஆர்ப்பரிப்பதே , வழக்கமாகி விட்டது .

தி . மு . க ., வைப் பொறுத்த மட்டில் ,
அண்ணாவைச் சொல்லி , கலைஞர் வந்தார் ; ஐந்து முறை  அரசாண்டும் விட்டார் .
ஆனால் , மகனுக்கு மட்டுமன்றி , பேரன் வரை பதவி பெற வழி வகுத்தவர் , கலைஞரேதான் .
பதவிக்கு வர தயா நிதி  மாறன் , கனிமொழி  போன்றோரின் , அரசியல் பங்களிப்புக்கள் என்ன ?
கலைஞரின் உறவு என்ற , ஒரே தகுதிகள்தான் . இல்லையென , தி .மு . க .,வே மறுக்காது .
ஸ்டாலின் , அழகிரிக்களீன் வாரிசுகளான , உதய நிதி , தயாநிதிக்களீன் வாரிசுப் போர் .அடுத்தத் தலைமுறை தி .மு. க .,வுக்கு  தொடரும் ; பரவும் .

வாரிசு வளர்த்தல்  , உலக மயமாக்கப்பட்டு விட்ட வழிதான் .
இன்றைய , அமெரிக்க அதிபர் ., ஜியார்ஜ் புஷ் .,ன் தந்தை  , முன்னாள் அதிபரான புஷ்தான் .
அடுத்த தேர்தலுக்கு போராடும் , ஹில்லாரியோ , முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவிதான் .
பெனசீர் புட்டோவின் , 19 வயதான பிலாவல் புட்டோவோ  , அறிவிக்கப்பட்ட வாரிசு .

ஆக ,, வாரிசில்லா அரசியலுக்கு , பழகாத மக்களிருக்கும் வரை ,  வாரிசுகள் வந்தபடியே இருப்பர்தான் . இதுவே , ஆசிய அரசியலின் சாபக்கேடு ..!

     ச. பிரசன்னா 

Say your words