Archive for கவிதை

பிரசன்னாவின் தமிழ்ப் பதிவுகள்

அன்பு .

முதலிருபது வருடம் 
கணவனுக்காகவும் ,
பிந்தைய வருடங்கள் 
பிள்ளைக்காகவும் ,
மிஞ்சிய வருடங்களை 
பேரன்களுக்காகவும்
கழித்ததும்தான்
கண்ணம்மா பாட்டிக்குத்
தெரிந்தது  .
அவளது
அம்மாவின் அன்பும்
‘ பேங்க் ‘  பேலன்ஸும்தான்
உலகில்
நிரந்தரமென்று !
      சொந்தம் .

அம்மாவோடு
 நானும்
சேர்ந்து
கொணடேன்
முதியோர் இல்லத்தில் .
நானும்
வேண்டாத
அம்மாவாய்
மாறிய பொழுது !
   ச. பிரசன்னா 

Leave a comment »

பிரசன்னாவின் கவிதை

ஏற்பு .

கணக்கில்லா கடன்களும்
கட்டுக்கடங்கா பிள்ளைகளூம்
நிரந்தரமற்ற ஊழியங்களும்
நிச்சயமற்ற வருமானங்களூம்
சொல்லத்தகா  சொந்தங்்களூம் 
சொல்லவேயில்லா சொத்துக்களும்
கொண்டிருந்தும்  , பொறுத்திருந்து
கோடானுகோடிப் பேர் 
போராடி வாழ்கையிலே
இருப்பதிலே இன்புறாமல்
இல்லாததற்காய் ஏங்கிடாமல்
போதுமென்ற மனதோடு
வாழ்ந்திடுவீர் வளமோடு !
ச . பிரசன்னா

Leave a comment »

பிரசன்னாவின் சமீப கவிதை

காதற்  குணங்கள் .

காதல்
தேவ ரகசியம்தான் .
காதலர்கள் ்  
தரையிலேயே                            
நடப்பதில்லையென்பதால் !           
                                                                
காதலுக்கு
மொழியேயில்லைதான் .                    
என்னப்
பேசுகிறோமென்றே               
தெரியாமல்
காதலர்கள்
பேசிக் கொண்டேயிருப்பதால் !

காதலும்
அட்சயப் பாத்திரம்தான் .
எவ்வயதிலும்
உணவாக
உணர்வாய்
மீண்டுமெழுவதால் !

காதல்            
நல்ல ரசாயனம்தான் .                                      
தரமற்றதாயினும்                                               
தடையின்றிக்                                                   
கலப்பதனால் !

காதலும்  கூட
‘ ஒலிம்பிக்ஸ் ‘ தான் .
வெல்வதைக்
காட்டிலும்
பங்கேற்பதே
பெரிதெனக்
கருத வைப்பதால் !

காதலும்
ஒர்
இண்டெர்நெட்தான் .
எவர்க்குமே
சொந்தமில்லையென்பதால் !

  ச . பிரசன்னா .

Leave a comment »

பிரசன்னாவின் அரசியல் பார்வையும் & அரசாங்க குத்தாட்டமும் …!

குத்துப் பாட்டுக்காரன் ..

 குத்து பாட்டு …
 இலவசமா . . .
 பாடுவேனுங்கோ !
 இலவசமா இறைச்சதென்ன  ?
 சொல்லுறேனுங்கோ !

 கேஸ் அடுப்பு  இலவசமாம் …
 ரேஷன் அரிசி குறைச்சலுதான் …
 சிலிண்டர் வாங்க காசு இல்லையே ..?
 கனெக்ஷனுக்கு வழியுமில்லையே ..?

 இலவசமா  முட்டையாம் ..
 இஸ்கூல்ல  தருவாங்களாம் …
 பாலு விலை ஏறிடுச்சியா ? – கூட
 கறி  விலையும்  உசந்திடுச்சியா ..!

 ரயிலு ரேட்ஏறலைதான் ..
 ஏறி , போக ஆவலைதான் …
 பஸ்ஸு ரேட்டு மாறிடுச்சியா …!
 ஆட்டோ சார்ஜோ எகிறிடுச்்சியா …?

 விவசாயி வாழனும்னா …
 விலையை ஏத்தணும் …
 எழைபாழை வாழனும்னா …
 விலையைக் குறைக்கணும் ..!

 ஏழை  வாழத்தான் வழியுமில்ல  —  பண
 வீக்கம்தான் குறையவில்ல …!                                           
 பட்ஜெட்லாம்  போடுறாங்களாம் ..
 ஏழைக்கெல்லாம் கொடுக்கறாங்களாம் …  
          
 என்னதான் கொடுத்தாங்க …?                    
 ஏதுதான் கொடுத்தாங்க …?                                  
         தெரிஞ்சாதான் சொல்லுங்களேன் … 
 பணப் புழக்கமாக செய்யுங்களேன் …!
                                                   ச. பிரசன்னா 

Leave a comment »